பிளஸ்-2 தனித்தேர்வர்களுக்கு இணையத்தில் விடைத்தாள்

சிவகங்கை: பிளஸ்-2 துணைத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இணையதளம் மூலமாக விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.



செப், அக்., 2014ல் பிளஸ் 2 பொதுத்தேர்வில் துணைத் தேர்வு எழுதியோர் (ண்tதஞீஞுணt.டச்ண்14ணூtதி.டிண) என்ற முகவரியில் இன்று (நவ.,5) காலை 10 முதல் 6 ந்தேதி மாலை 5 மணிவரை தங்களது தேர்வு பதிவெண், விண்ணப்ப எண்களை பதிவு செய்து விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன்பின் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இதே இணையதளத் தில் அணீணீடூடிஞிச்tடிணிண ஞூணிணூ கீஞுtணிtச்டூடூடிணஞ்/ கீஞுதிச்டூதtடிணிண என்ற தலைப்பில் 'கிளிக்' செய்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தியான படிவத்தை 2 நகல்கள் எடுத்து நவ.,7 காலை 10 மணி முதல் 8ந்தேதி 1 மணிக்குள் உரிய சி.இ.ஓ., அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும். மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தை சி.இ.ஓ., அலுவலகத்தில் பணமாக செலுத்தவேண்டும் என, அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.---