மனை வாங்க ரூ.12.50 இலட்சம் அரசு ஊழியர்களுக்கு சலுகை

 தமிழ்நாடு அரசு ஊழியர்கள், வீடு கட்ட வழங்கப்படும் மொத்த தொகையில் வீட்டு மனை வாங்க முன்பணமாக 20% வழங்கப்பட்டு வருவதை 50% ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு
உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழ்நாடு அரசு
ஊழியர்கள் வீடு கட்ட ரூ.15 இலட்சம் முதல் ரூ.25 இலட்ச ரூபாய் வரை கடன் வழங்கபடுகிறது.வீட்டு  மனை வாங்க கடன் தொகையில் முன்பணமாக 20% வழங்கப்பட்டு வந்தது.இதனை 50%-ஆக உயர்த்தி தரவேண்டும் என தலைமை செயலக ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.இதனை ஏற்று,இதற்கான அரசாணையை நேற்று முன்தினம் தமிழக அரசு வெளியிட்டது.