TNPSC: 29 முதல் குரூப் - 4 கலந்தாய்வு.

 'நிரம்பாமல் உள்ள, குரூப் - 4 காலி இடங்களை நிரப்ப, இரண்டு,  மூன்று மற்றும் நான்காம் கட்ட கலந்தாய்வு, வரும், 29ம் தேதி முதல், நவ., 1ம் தேதி வரை நடக்கும்' என, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) அறிவித்துள்ளது. 

                    செயலர், விஜயகுமார் அறிவிப்பு: கடந்த ஆண்டு நடந்த குரூப் - 4 தேர்வில், தகுதியானவர்கள், முதல் சுற்று கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு, பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. நிரம்பாமல் உள்ள காலியிடங்களை நிரப்ப, இரண்டு, மூன்று மற்றும் நான்காம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, வரும், 29ம் தேதி முதல், நவ., 1ம் தேதி வரை, சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்கும். இது குறித்த விவரம், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர், அசல் சான்றிதழ் மற்றும் சுய கையொப்பம் இட்ட சான்றிதழ்களுடன், கலந்தாய்வுக்கு வர வேண்டும். பத்தாம் வகுப்பை, தமிழ் வழியில் படித்தவர் எனில், அதற்கான முன்னுரிமையை பெற, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம், சான்றிதழ் பெற்று வர வேண்டும். இவ்வாறு, விஜயகுமார் தெரிவித்துள்ளார். மொத்தம், 3,469 இடங்களை நிரப்ப, ஏற்கனவே நடத்திய முதல் சுற்று கலந்தாய்வில், 2,500 இடங்கள் வரை நிரம்பியதாகவும், மீதம் உள்ள இடங்களுக்கு, தற்போது கலந்தாய்வு நடத்துவதாகவும், துறை வட்டாரம் தெரிவித்தது.