மாணவர்களுக்கு பருவகால மழையை முன்னிட்டு ஆசிரியர்கள் அளிக்க வேண்டிய அறிவுரைகள்:

தண்ணீரை காய்ச்சி பின் வெப்பம் தனித்து வடிகட்டி குடி - பல்வேறு நோய்களை தடுக்கும்.

வெளியில் செல்லும்போது செருப்பு அணிந்து செல் - இல்லையேல் கிருமி தொற்றிக்கொள்ளும்.

ஈரமான உடைகளை உடுத்தாதே - படை ஏற்படும்.

மழையில் நினையாதே - காய்ச்சல் வரும்.

மழைக் காலத்தில் குடை அல்லது கோட் எடுத்து செல் -
முன்னெச்சரிக்கை.

பாதையின் மேல் கவனம் வைத்து நடந்து செல் - மின் கம்பிகள் அறுந்து விழுந்திருக்கலாம்.

கழிவறையை பயன்படுத்திய பின் சோப்பு கொண்டு கை மற்றும் கால்களை நன்றாக கழுவவும் - கிருமி தோற்று ஏற்படாது.

காய்ச்சல் வந்தால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகு - டெங்கு, மலேரியாவாக இருக்கலாம்.

சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கோள் - கொசுக்கள் வரமால் இருக்கும்.

மழைக்காலங்களில் பெற்றோரை காலை மற்றும் மாலையில் பள்ளிக்கு பிள்ளைகளை அழைத்து வந்து மற்றும் செல்ல அறிவுறுத்தலாம்.