கடலூர்:பள்ளி கல்வித் துறையில்
காலியாக உள்ள கணினி பயிற்றுனர்
பணிக்கான பதிவு மூப்பு பட்டியல்
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில்
வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;தமிழக பள்ளி கல்வித்துறையில்
காலியாக உள்ள 652 தொழிற்கல்வி கணினி பயிற்றுநர் பணி
காலியிடங்கள்
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்பப்பட
உள்ளது. இதற்காக வேலைவாய்ப்பு மற்றும்
பயிற்சி துறையில் பதிவு மூப்பு பட்டியல்
தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு
பி.எஸ்சி., கணினி அறிவியல்
அல்லது பி.சி.ஏ.,
அல்லது பி.எஸ்சி., தகவல்
தொழில் நுட்பத்துடன் பி.எட்., முடித்திருக்க
வேண்டும்.முன்னுரிமை பிரிவில் பதிவு செய்துள்ள அனைத்து
பதிவுதாரர்களும், முன்னுரிமையற்ற பிரிவில் எஸ்.டி., பிரிவினர்
3.9.2011 வரையிலும், எஸ்.சி.,அருந்ததியினர்
20.12.2010 வரையிலும், பி.சி., முஸ்லிம்
17.8.2009 வரையிலும், எஸ்.சி.,-எம்.பி.சி., பி.சி., உள்ளிட்ட இதர
பிரிவினர் 22.8.2008 வரையிலும் பதிவு செய்துள்ளவர்கள் பரிந்துரை
செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான
பதிவு மூப்பு பட்டியல் மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலக விளம்பர பலகையில்
ஒட்டப்பட்டுள்ளது. இப்பட்டியலில் தங்கள் பெயர் இடம்
பெற்றுள்ளதா என்பதை வரும் 31.10.2014ம்
தேதிக்குள் நேரில் சென்று உறுதி
செய்துக் கொள்ள வேண்டும்.
பட்டியியலில்
பெயர் இல்லாதவர்கள் அசல் வேலை வாய்ப்பு
அலுவலக அடையாள அட்டையுடன், மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் தொடர்பு
கொள்ளலாம்.
இவ்வாறு
செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

