இந்தியாவின் 'தேசிய மரம்'

தேசிய மரமான ஆலமரத்தின் அறிவியல் பெயர் பிகஸ் பெங்காலெனிசிஸ். சமஸ்கிருதத்தில் 'வட வ்ருக்சம்' என்பர்.
மகாராஷ்டிராவில் நாசிக்கில் உள்ள பஞ்சவடி 'ஐந்து ஆலமரங்கள்' இணைந்ததைக் குறிக்கிறது. அகலமான மரம் ஆலமரம்.அகல் என்ற சொல்லே ஆல் என மருவியதாக பெயர்க் காரணம் கூறுவர். சங்க இலக்கியங்கள் ஆல மரத்தை 'வீழ்' என்கின்றன. விழுதுகள் கீழ் நோக்கி வீழ்வதால் 'வீழ்' எனப் பெயர் வந்தது என்பர். ஆலமரத்தின் கீழ் வழிபாட்டினால் தான், ஆலயம் என்னும் சொல் வந்தது.