தமிழகம் முழுவதும் 300 உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாதநிலைநீடித்து வந்ததுஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் அந்த இடங்கள்நிரப்பப்பட்டு வருகின்றனஅதேபோல இந்த ஆண்டு 100 உயர்நிலைப்
பள்ளிகள் மேனிலைப் பள்ளிகளாக தரம் உயர்த் தப்பட்டுள்ளன.
ஆனால்உயர்நிலைப் பள்ளிகளை பொருத்தவரை 300 பள்ளிகளில்தலைமை ஆசிரியர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை.ஒவ்வொருஆண்டும் உயர்நிலைப் பள்ளிகளில் ஒய்வு பெறும் தலைமைஆசிரியர்கள் பணியிடங்கள் அல்லது பணியில் இறந்துபோனால்ஏற்படும் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்புவார்கள்கடந்த ஆண்டுஇது போல ஏற்பட்ட பணியிடங்களை டிசம்பரில் தான் நிரப்பினர்.
இந்த ஆண்டு தலைமைஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப கடந்தஜூன் மாதம் வரை கணக்கெடுப்பு நடத்திஜூலை மாதம் கவுன்சலிங்நடத்தப்பட்டதுஆனால் இன்னும் 300 பள்ளிகளுக்கு தலைமைஆசிரியர்கள் நியமிப்பதற்கான பணிஆணைகள்வழங்கப்படவில்லை.பள்ளிகளில் இரண்டாம் பருவம்தொடங்கிவிட்டதுபத்தாம் வகுப்பு மற்றும் மேனிலைப் பள்ளிகளில்படிக்கும் மாணவர்கள் இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்வை எழுதவேண்டிய நிலையில் உள்ளனர்அவர்களை தேர்வுக்கு தயார் படுத்ததலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

தலைமை ஆசிரியர் நியமனம் தொடர்பாக நீதிமன்ற வழக்குஇருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள்தெரிவிக்கின்றனர்.இந்த வழக்கு முடிந்து எப்போது தலைமைஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்பதையும்தெளிவாக்கவில்லைவரும் டிசம்பர் மாதத்திலாவது பணி நியமனஆணைகள் வழங்கினால் பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்செய்ய முடியும் என்று பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.