ஆசிரியர் தகுதி தேர்வு : சலுகை மதிப்பெண் வழங்க பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து

ஆசிரியர் தகுதி தேர்வில் 5 மதிப்பெண் சலுகை வழங்க வகை செய்யும் அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் மதுரை ஐகோர்ட் கிளை மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது.
மதிப்பெண் சலுகை வழங்க மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக மனுதாரர் தரப்பு வாதிட்டது.
மேலும் நடைமுறைக்கு மாறாக 5 மதிப்பெண் சலுகை வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. 2012ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசாணையை ரத்து செய்ய கோரி இவ்வழக்கு தொடரப்பட்டது.