சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப் பிக்க செப்டம்பர் 30-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது

சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப் பிக்க கால வரம்பு நீட்டிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக சிறுபான்மையி னர் நல ஆணையர் முகமது அஸ்லம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்
கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வாழும் மதவழி சிறுபான்மையின மாணவ, மாணவி களுக்கான பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகைக்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க செப்டம்பர் 30-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, இதுவரை பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை பெற தகுதி வாய்ந்த சிறுபான் மையின மாணவ, மாணவியர் ஆன்லைன் மூலம், www.momascholarship.gov.in என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பித்து, தங்கள் கல்வி நிலையங்களுக்கு அனுப்பலாம்.