உதவி பேராசிரியர் போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், அரசு பொறியியல்கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு, போட்டித் தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இத்தேர்வுக்கு விண்ணப் பங்கள் விநியோகம், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் புதன்கிழமை தொடங்கியது. செப்டம்பர் 5-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.விண்ணப்ப படிவக் கட்டணம் ரூ.100. பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை திரும்ப வழங்க கடைசி தேதி செப்டம்பர் 5. இதுவரை 270-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன.