அரசு, அரசு உதவி பெறும் பள்ளி விவரங்கள் சேகரிப்பு பணி தீவிரம்

    கடலூர் மாவட்டத்தில் பள்ளியின் விவரங்களை சேகரிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில், கடலூர் மற்றும் விருத்தாசலம் கல்வி மாவட்டங்களில் 1500க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள்
எண்ணிக்கை, பணிபுரியும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஊழியர்கள் எண்ணிக்கை, காலி பணியிடங்கள், பள்ளியின் பெயர், முகவரி, பள்ளிகளில் செயல்படும் மன்றங்கள், ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி தரம் உயர்த்தப்பட்ட நாள் என, 28 வகையான விவரங்களை சேகரிக்க சி..., உத்தரவிட்டுள்ளார்.

             அதன்படி, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தேவையான விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுபோன்ற விவரங்கள் சேரிக்கப்படுவது வழக்கம். சேகரிக்கப்படும் விவரங்கள் அடிப்படையில், தலைமை ஆசிரியர் மற்றும் பாடவாரியாக உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். மாணவர்களின் அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படும் என்றார்.கடலூர் மாவட்டத்தில் பள்ளியின் விவரங்களை சேகரிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில், கடலூர் மற்றும் விருத்தாசலம் கல்வி மாவட்டங்களில் 1500க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை, பணிபுரியும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஊழியர்கள் எண்ணிக்கை, காலி பணியிடங்கள், பள்ளியின் பெயர், முகவரி, பள்ளிகளில் செயல்படும் மன்றங்கள், ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி தரம் உயர்த்தப்பட்ட நாள் என, 28 வகையான விவரங்களை சேகரிக்க சி..., உத்தரவிட்டுள்ளார்.
 
             அதன்படி, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தேவையான விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுபோன்ற விவரங்கள் சேரிக்கப்படுவது வழக்கம். சேகரிக்கப்படும் விவரங்கள் அடிப்படையில், தலைமை ஆசிரியர் மற்றும் பாடவாரியாக உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். மாணவர்களின் அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படும் என்றார்.