மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க கோரி தொடரப்பட்ட ஊதிய வழக்கின் நிலை!

SSTA சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு WP.NO.10546/2014 நீதியரசர் திரு.ராமநாதன் அவர்கள் முன் நமது மூத்த வக்கீல்  திங்கள் (21.07.2014) அன்று விசாரணைக்கு வரும் என கூறி இருந்தார். தற்போது நமது வழக்கிற்கான சாதகமான சூழ்நிலை இல்லாததால் நமது வழக்கை சிறிது நாட்களுக்கு
பின் மீண்டும் வாதத்திற்கு கொண்டு வரலாம் என நமது மூத்த வக்கீல் திரு. செல்வராஜ் அவர்கள் ஆலோசனை கூறியுள்ளார்.

SSTA பொதுச்செயலாளர் திரு.ராபர்ட் அவர்கள் நேரில் சென்று கலந்துரையாடினர். அப்போது சேலம் மாவட்டத்தை சேர்ந்த திரு.விஜயபாஸ்கர் மற்றும் திரு.ஜெய்சங்கர் உடனிருந்தனர். வழக்கை  மீண்டும் விரைவாக வாதத்திற்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இதுசார்ந்து மேலும் தகவல்கள் பெற SSTA பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளுமாறு SSTA மாநில அமைப்பு கேட்டுக்கொள்கிறது.