கள்ளர்
சீரமைப்புத்துறை பள்ளி ஆசிரியர்களிடம் வீட்டு
வாடகைப்படி பிடித்தம் செய்யும் இணை இயக்குனரின் உத்தரவிற்கு
மதுரை ஐகோர்ட் கிளை தடை
விதித்தது. உசிலம்பட்டி அருகே விளாம்பட்டி அரசு
கள்ளர்
துவக்கப் பள்ளி ஆசிரியர் மரியசெல்வம்
தாக்கல் செய்த மனு:
மதுரை கள்ளர் சீரமைப்புத்துறை இணை
இயக்குனர் ஜூலை 4ல் ஒரு
உத்தரவிட்டார். அதில் உசிலம்பட்டி, செக்கானூரணி
சரகத்தில் கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகளில்
பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2009 ஜூன் முதல் 2011 டிசம்பர்
வரை கூடுதல் வீட்டு வாடகைப்படி
வழங்கப்பட்டுள்ளது. 19 லட்சத்து 73 ஆயிரத்து 839 ரூபாய் சம்பளத்தில் பிடித்தம்
செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.