தமிழகம் முழுவதும் நேற்று நடந்த குரூப் 1 முதல்நிலை தேர்வில் 89,433 (55
சதவீதம்) பேர் தேர்வு எழுதவரவில்லை. சென்னையில் 21,692 பேர் ஆப்சென்ட்
ஆகியுள்ளனர். இவ்வளவு பேர் தேர்வு எழுத வராததற்கு என்ன காரணம் என்று
டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் உயர்
பதவிகளான துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளுக்கு குரூப் 1
தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி குரூப் 1 பதவியில் அடங்கிய துணை
கலெக்டர் (3), போலீஸ் டிஎஸ்பி (33), வணிகவரித் துறை இணை ஆணையாளர் (33)
மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் (10) ஆகிய 79 பதவிகளுக்கான முதல்
நிலைத் தேர்வு ஜூலை 20ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி,
நேற்று குரூப் 1 முதல்நிலை தேர்வு நடந்தது. இத்தேர்வை எழுத தமிழகம்
முழுவதும் மொத்தம் 1 லட்சத்து 62 ஆயிரத்து 606 பேர் அனுமதிக்கப்பட்டனர்.
சென்னையில் மட்டும் 35,675 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதற்காக
மாநிலம் முழுவதும் 32 மாவட்டங்களில் 557 தேர்வு கூடங்கள்
அமைக்கப்பட்டிருந்தன.
சென்னையில் திருவல்லிக்கேணி என்.கே.டி. மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. கெல்லட்
மேல்நிலைப்பள்ளி, மயிலாப்பூர் சிறுவர் தோட்ட மேல்நிலைப்பள்ளி, சாந்தோம்
செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல் நிலைப்பள்ளி, மேற்கு சைதாப்பேட்டை
சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ராணி மேரி கல்லூரி, காயிதே மில்லத் மகளிர்
கல்லூரி என மொத்தம் 108 அரசு பள்ளிகள், கல்லூரிகளில் இத்தேர்வு நடந்தது.
காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1 மணி வரை நடந்தது. தேர்வு
எழுதுவதற்கு பல மையங்களில் ஆண்களும், பெண்களும் காலை 8 மணிக்கே வரத்
தொடங்கினர். இதற்கு ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி அடிப்படை தகுதியாக
கேட்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்வை ஏராளமான முதுநிலை, மருத்துவம்,
இன்ஜினியரிங் படித்த பட்டதாரி மாணவ& மாணவிகளும் எழுதினர்.
பல பெண்கள் கைக்குழந்தையுடன் தேர்வு எழுத வந்திருந்தனர். அவர்கள் தேர்வு
எழுத சென்ற நேரத்தில் குழந்தையை கணவன்மார்கள் பார்த்துக் கொண்டனர். தேர்வு
எழுதுவோர், சோதனை செய்யப்பட்ட பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
கால்குலேட்டர், செல்போன் போன்றவற்றை கொண்டு செல்ல தடை
விதிக்கப்பட்டிருந்தது. தேர்வில் முறைகேடுகள் ஏதும் நடக்காமல் தடுக்க
மாவட்டங்களில் கலெக்டர்கள் தலைமையில் பறக்கும் படைகள் தீவிர கண்காணிப்பு
பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும், தலைமை கண்காணிப்பாளர் 570 பேர்,
கண்காணிப்பாளர் 7009 பேர், ஆய்வு அதிகாரிகள் 570 பேர்
ஈடுபடுத்தப்பட்டனர்.சென்னையில் மட்டும் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள்
கண்காணிப்பில் தேர்வுகள் நடந்தது. பல்வேறு மையங்களில் அதிரடி சோதனையும்
நடத்தப்பட்டது. தேர்வு நடந்த அனைத்து இடங்களிலும் வீடியோ கேமரா மூலம்
கண்காணிக்கப்பட்டது. முறைகேடு நடக்கும் என்று கண்டறியப்பட்ட மையங்கள் வெப்
கேமரா மூலம் சென்னையில் இருந்து கண்காணிக்கப்பட்டது. தேர்வு நடைபெற்ற
அனைத்து பள்ளிகள் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
டி.என்.பி.எஸ்.சி. தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன்
திருவல்லிக்கேணியில் உள்ள சி.எஸ்.ஐ. கெல்லட் மேல்நிலைப்பள்ளி, மயிலாப்பூர்
சிறுவர் தோட்ட மேல்நிலைப்பள்ளியில் திடீரென ஆய்வு செய்தார். அப்போது,
தேர்வுக்கட்டுப் பாட்டு அதிகாரி ஷோபனா உடன் இருந்தார்.
தேர்வில் பொது அறிவியலில் 150 வினாக்களும், ஒருவரின் சிந்தனைத்திறன்,
பொதுவிழிப்புணர்வு, பகுத்து ஆராயும் திறனை ஆய்வு செய்யும் வகையில் 50
வினாக்களும் என 200 வினாக்கள் கேட்கப்பட்டன. மொத்தம் 300 மதிப்பெண்கள்.
தேர்வு எழுதி விட்டு வந்தவர்கள் தேர்வு எளிதாக இருந்ததாக
தெரிவித்தனர்.குரூப் 1 தேர்வுக்கு மொத்தம் 1 லட்சத்து 62 ஆயிரத்து 606 பேர்
அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் சுமார் 45 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு
எழுதியுள்ளனர். அதாவது 73,173 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். 55
சதவீதம் பேர் அதாவது 89,433 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.சென்னையில் 35, 675
பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதில் 42 சதவீதம் மட்டுமே தேர்வு
எழுதியுள்ளனர். அதாவது 14,983 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர்.
21,692(48 சதவீதம்) பேர் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகியுள்ளனர் என்று
டி.என்.பி. எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.தேர்வு நடந்த பல மைய ங்கள்
ஆளில்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இந்த அளவுக்கு ஆப்சென்ட் ஆகியுள்ளதை
கண்டு டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இவ்வளவு பேர்
ஆப்சென்ட் ஆக என்ன காரணம் என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.
டி.என்.பி.எஸ்.சி. தலைவர்(பொறுப்பு) பால சுப்பிரமணியன் அளித்த பேட்டி: