பொது மாறுதல் கலந்தாய்வில் தொடக்கக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அரசு / நகராட்சி பள்ளிகளில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் ஆன்லைன் மூலம் நடத்த திட்டம்

2014-15ம் கல்வியாண்டிற்கான
பொது மாறுதல் கலந்தாய்வில்
தொடக்கக்கல்வித்துறையின்
கட்டுப்பாட்டிலுள்ள அரசு /
நகராட்சி பள்ளிகளில்
பணிபுரிந்துவரும்

ஆசிரியர்களுக்கான மாறுதல்
கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
ஆசிரியர்களுக்கான மாறுதல்
கலந்தாய்வில் இடைநிலை மற்றும்
பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட
கலந்தாய்வு ஆன்லைன் மூலம்
நடத்துவதற்கான ஆயுத்த பணிகள்
தொடக்கக் கல்வி இயக்குனரகத்தால்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது என
தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து ஆன்லைன்
கலந்தாய்விற்கு நடத்த ஏதுவாக புதிய
விண்ணப்பம் உதவித் தொடக்கக்
கல்வி அலுவலகம் மூலம் விரைவில்
வழங்கப்படவுள்ளதாக
தெரிகிறது. இதையடுத்து ஆசிரியர்கள்
தங்களின் சொந்த மாவட்டத்தில் மாறுதல்
கிடைக்கவில்லையென்றாலும்
அருகிலுள்ள
வேறு மாவட்டத்திற்கு மாறுதல் பெற
வாய்ப்புள்ளது.