உயர்நீதிமன்ற உத்தரவின்படி நியமன நாளின் அடிப்படையில் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற தமிழ் பண்டிட்களுக்கு எதிராக தொடுத்த வழக்கு இன்று விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு - TNPPGTA

இதுகுறித்து தமிழ்நாடு பதவி உயர்வு முதுகலை ஆசிரியர் சங்கத்தின் நிறூவன தலைவர் திரு.வேம்பன், மாநில தலைவர் திரு.பொன்.செல்வராஜ்  அளித்த பேட்டியில்; தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் அண்மையில் நடந்த உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி தமிழ் பண்டிட்களுக்கு அவர்கள் நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து பதவி உயர்வு வழங்கப்பட்டு, இதை எதிர்த்து தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் தொடுக்கப்பட்ட மேல் முறையீட்டு மனுவினால், நியமன ஆணை  வழங்காமல் இருந்தது.

இந்த வழக்கு இன்று இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இறுதி தீர்ப்பு அடுத்த வாரத்தில் வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.