தமிழ் கட்டாய பாடம்: முதல்வர் ஆய்வு.

தமிழகத்தில், அனைத்து மாநில வாரியப் பள்ளிகளிலும், முதல் வகுப்பில் இருந்து, 10ம் வகுப்பு வரை, பகுதி ஒன்றில், தமிழை கட்டாய பாடமாக்கும் சட்டத்தை கடைபிடிப்பது குறித்த, ஆய்வுக்

கூட்டம், தலைமைச் செயலகத்தில் நடந்தது.
முதல்வர் ஜெயலலிதா தலைமை தாங்கினார். கூட்டத்தில், 2006ம் ஆண்டைய, தமிழ்நாடு தமிழ் கற்பதற்கான சட்டத்தின்படி, முதல் வகுப்பில் இருந்து, ௧௦ம் வகுப்பு வரை, பகுதி ஒன்றில், தமிழை கட்டாய பாடமாக, தமிழகத்தில் உள்ள, அனைத்து மாநில வாரியப் பள்ளிகளும் கடைபிடிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.சட்டத்தை கடைபிடிப்பது குறித்து, சம்பந்தபட்ட துறை அதிகாரிகளுக்கு, முதல்வர் பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.