490 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

பள்ளிக்கல்வித்துறையில் 2014-15ம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஜூன் 16 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூன் 19ம் தேதி அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. இதையடுத்து பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த 699 பேர் அடங்கிய சுழற்சி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 

இதுவரை கிடைக்கப்பெற்ற தகவலின்படி 490 பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படவுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 2014-15ம் கல்வியாண்டிற்கான தரம் உயர்த்தப்பட உள்ள பள்ளிகளுக்கு தனியாக கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.