புதிய பாட திட்டத்தின்படி, காலாண்டு தேர்வில், 'ப்ளூ பிரிண்ட்' இல்லாத, வினாத்தாள் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதனால், அரசின் வினாத்தாளை பின்பற்றி தேர்வை நடத்த, தனியார் பள்ளிகள் ஆர்வம் காட்டுகின்றன.
தமிழகத்தில், பள்ளி கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில், கொள்கை அளவில் பல்வேறு மாற்றங்களை, அரசு மேற்கொண்டுள்ளது.பாட திட்டம் மாற்றப்பட்டு, அனைத்து வகுப்புகளுக்கும், புதிய பாட திட்டம் அமலாகியுள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு பொது தேர்வு முறை அமலாகியுள்ளது. மேலும், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, பொது தேர்வில் இருந்த, 'ரேங்கிங்' முறை மற்றும், ப்ளூ பிரிண்ட் வினாத்தாள் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால், மாணவர்கள், புத்தகத்தில் உள்ள பாடங்கள் முழுவதையும் படித்து, பொது தேர்வை எழுதி வருகின்றனர்.இந்த பழக்கம், மாணவர்களுக்கு நுழைவு தேர்வு எழுதுவதற்கு, எளிதான நிலையை ஏற்படுத்தியுள்ளது.