நேற்றைய தினம் நடைபெற்ற பணிநிரவல் கலந்தாய்வு ஆணைகள் அனைத்தும் நிறுத்தி வைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

நேற்று நடைபெற்ற இ.நி.ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு ஆணையை யாருக்கும் வழங்கக்கூடாது எனவும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கச் சொல்லியும் தற்போது மதுரையில் நடைபெறும் DEO Review meeting-ல் தகவல் வழங்கப்பட்டுள்ளது
.

நேற்று நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்( உபரி  ) மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு பணி மாறுதல் ஆணை பெற்றவர்களை மரியாதைக்குரிய தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களிடமிருந்து 

உரிய உத்தரவு வரும் வரைக்கும் எக்காரணம் கொண்டும் தற்போது பணிபுரியும் பள்ளியிலிருந்து பணிவிடுவிப்பு செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.தகவல்: மாவட்டக்கல்வி அலுவலர் மேலூர்...