நாகை வருவாய் கோட்டத்துக்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

நாகை வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை திங்கள்கிழமை (நவ.26) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார்
உத்தரவிட்டுள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, நாகை வருவாய்க் கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.