'காய்ச்சல் இருந்தால், மாணவர்கள், பள்ளிக்கு வர வேண்டாம்' என, தனியார் பள்ளிகள் அறிவுறுத்திஉள்ளன.தமிழகத்தில், தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது.
இதற்கு இடைப்பட்ட காலத்தில், லேசான மழை பெய்வதால், சில இடங்களில் மழை நீர் தேங்கி, அவற்றின் வாயிலாக, டெங்கு கொசு உற்பத்திஆகியுள்ளது.உயிரிழப்புகள்எனவே, மாநிலம் முழுவதும், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுகின்றன. காய்ச்சல் காரணமாக, பல இடங்களில், குழந்தைகள், சிகிச்சை பலனின்றி உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. அதனால், காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளில் நிலவேம்பு குடிநீர் வழங்கவும், மருத்துவ முகாம் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், பல தனியார் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சார்பில், மாணவர்களுக்கு,