நிபா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்று வந்த
28 வயது இளைஞர் மரணம் அடைந்ததை அடுத்து, கேரளாவில் நிபா வைரஸால்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
கரசேரி
பகுதியைச் சேர்ந்த அகில் என்ற இளைஞர் நிபா வைரஸ் பாதித்து கடந்த 29ம் தேதி
முதல் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வந்த நிலையில், நேற்று இரவு உயிரிழந்தார்.
நிபா
வைரஸால் உயிரிழந்தவர்களுடன் இருந்த மேலும் 2 பேருக்கு நிபா வைரஸ்
தாக்கியது உறுதி செய்யப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும், நிபா வைரஸ் இருப்பது உறுதி
செய்யப்படுவதற்கு முன்பு, பாதிக்கப்பட்டவர்களுடன் இருந்த 1,353 பேர்
தற்போது தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும்,
நிபா வைரஸ் பாதித்து நெல்லிக்கோட் பகுதியில் சிகிச்சை பெற்று வந்த
மதுசூதனன் (55) நேற்று மரணம் அடைந்ததாகவும், செய்திகள் தெரிவிக்கின்றன.