ரயில்கள் குறித்து அறிய 'க்யூ.ஆர்., கோடு' வசதி

சென்னை:கோடை கால சிறப்பு ரயில்கள் பற்றிய, அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ள, பயணியருக்கு, புதிய வசதியை, தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது


கோடை காலத்தில், தெற்கு ரயில்வே, ஏப்ரல் முதல், ஜூன் வரை, முக்கிய நகரங்கள் இடையே, சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இந்த ரயில்கள் குறித்த அறிவிப்புகள், ஒரே தேதியில் இல்லாமல், பல தேதிகளில் வெளியிடப்படுகின்றன. இச்சிறப்பு ரயில்கள் பற்றிய முழு விபரங்களையும், பயணியர் தெரிந்து கொள்ள ஏதுவாக, 'க்யூ.ஆர்., கோடு' வசதியை, தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.

இந்த, 'க்யூ.ஆர்., கோடு' வசதியில், இந்த வடிவம், முக்கிய ரயில் நிலையங்கள், ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில், ஒட்டப்பட்டிருக்கும். இதை பயணியர், மொபைல் போனில், கூகுள் பிளே ஸ்டோரில், 'ஸ்கேன்' செய்து, வடிவில் தெரிந்து கொள்ளலாம்; பதிவிறக்கம் செய்து, பிரதிகளும் எடுத்துக் கொள்ளலாம் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.