அரசு பொதுத்தேர்வுகள்: கட்டுப்பாட்டு அறை திறப்பு

அரசு பொதுத்தேர்வுகளான 10ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்குவதை முன்னிட்டு, சிறப்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசு பொதுத்தேர்வுகள் தொடர்பாக புகார்கள், கருத்துக்கள், சந்தேகங்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.


 8012594105,8012594115, 8012594120, 8012594125 ஆகிய எண்ணில் புகார் தெரிவிக்கலாம். 12 ஆம் வகுப்பு தேர்வு மார்ச்-1 முதல் ஏப்ரல் 6 வரை நடக்கிறது. 11 ஆம் வகுப்பு மார்ச்-7 முதல் ஏப்ரல் 16 வரையிலும் 10 ஆம் வகுப்பு மார்ச் 16 முதல் ஏப்ரல் 20 வரை நடக்கிறது. கட்டுப்பாட்டு அறை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என பள்ளிகல்வித்துறை தெரிவி்த்துள்ளது.