டிச., 2ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில், முதல் சனிக்கிழமையான, டிச., 2ல், வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. 

தமிழகத்தில், மிலாது நபியையொட்டி, டிச., 1ல் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. பின், அரசின் தலைமை ஹாஜி அறிவுரைப்படி, மிலாது நபி, விடுமுறையை, டிச., 2க்கு மாற்றப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, டிச., 2 அன்று,

செலாவணி முறிச்சட்டம் - 1881ன் கீழ், தமிழகத்தில், பொது விடுமுறை அறிவித்துள்ளது. இதன்படி, தமிழகத்தில், மாதத்தின் முதல் சனிக்கிழமையான, டிச., 2- ல், வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இத்தகவலை, பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.