டிசம்பர் 2ம் தேதி முதல் தமிழகத்தில் மழை வாய்ப்பு

சென்னை: வடகிழக்கு பருவ மழை தொடங்கியதில் இருந்தே வறண்ட வானிலை நிலவும் தமிழகத்தில் டிசம்பர் 2ம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையச் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

அக்டோபர் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கிய வடகிழக்குப் பருவ மழையால் சென்னை உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் ஒரு சில நாட்கள் மழை பெய்தது.
ஆனால், கடந்த 3 வாரங்களாக தமிழகத்தின் ஓரிரு இடங்களைத் தவிர பரவலாக வறண்ட வானிலையே நிலவுகிறது. மேலும், சில பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது.
இந்த நிலையில், டிசம்பர் 2ம் தேதி முதல் ஒரு வார காலத்துக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.