பெட்ரோல், டீசல் விலை உயர்வு

புதுடில்லி: பெட்ரோல் விலை, நேற்று நள்ளிரவு முதல், லிட்டருக்கு, 1.34 ரூபாய் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில், கச்சா விலை மாற்றத்தை பொறுத்து, பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதன்படி, நேற்று, பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 1.34 ரூபாயும்; டீசல் விலை, லிட்டருக்கு, 2.37 ரூபாயும்
உயர்த்தப்பட்டுஉள்ளது. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இந்த விலை உயர்வை அடுத்து, டில்லியில், பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 66.05 ரூபாயாகவும்; டீசல் விலை, லிட்டருக்கு, 55.26 ரூபாயாகவும் விற்கப் பட்டது.