
📮நாடு முழுவதும்
நிலுவையில் உள்ள குடிமையியல் & குற்றவியல்
வழக்குகள் *2.7 கோடி*
📮10 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள
வழக்குகள் *20 லட்சம்*
📮2 - 5 ஆண்டுகள் நிலுவை - *59 லட்சம்*
📮2 ஆண்டுகளுக்கும் குறைவாக
நிலுவையில் உள்ளவை *82 லட்சம்*
*📮மூத்த குடிமக்கள்
சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5,84,273*
_ம.பி மற்றும் டெல்லி
மாநில விவரங்கள் தேசிய தகவல் தொகுப்புக்கு
மாற்றப்பட்டு வந்ததால் அந்த விவரங்கள் இதில்
இடம்பெறவில்லை. இது சென்ற ஆண்டு
நிலை மட்டுமே_ (தி இந்து)
*📮ஏப்ரல் (2016) = 2.18 கோடி.* (இந்தியன்
எக்ஸ்பிரஸ்)
மேற்கண்ட
தரவுகளின் படி மட்டுமல்ல, நீங்கள்
நாள்தோறும் கேள்விப்படும் அரசு சார் வழக்குகளிலும்,
தீர்ப்பு அரசின் கொள்கை முடிவில்
தலையிட முடியாது என்றோ; நீதிமன்றத் தீர்ப்பை
அரசே புறம் தள்ளுவதாகவோ தான்
இருக்கும் (சாலைப்பணியாளர், மக்கள் நலப் பணியாளர்கள்,
ஆசிரியப் பயிற்றுநர்கள் வழக்கு போன்று). இவை
எல்லாவற்றையும் தாண்டி அத்தி பூத்தாற்போல்
சில தீர்ப்புகள் நடைமுறைப் படுத்தப்டுகிறது என்பதும் மறுப்பதற்கில்லை.
ஆனால்,
இன்றைய சூழலில் *நாம் துய்த்து வரும்
பலன்கள், 100% நமது முன்னவர்களின் வலுவான
போராட்டங்களின் பயனே!* நமக்கான முறையான
உரிமை தொடர்பான முன்மொழிவுகள், மீட்புகள் உள்ளிட்ட அனைத்துமே போராட்ட வீச்சின் அடிப்படையில்
ஆட்சியாளர்களிடம் இருந்து பெறப்பட்டவையே.
எனவே,
*கோடிக்கைகள் ஒன்றிணைந்தால் தான் கோரிக்கைகள் வென்றிடமுடியும்.*
ஆனால்,
ஓய்வூதியப் போராட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் பங்கெடுப்பு மிகக் குறைவாகவே இருந்து
வந்துள்ளது. இந்நிலை மாற,
*உரிமை
பறிபோன வழியையும்*
*உடைமை
பலியான வலியையும்*
*உற்றவர்
உணர்ந்தாக வேண்டும்.*
எப்படியெனில்,
_வாசித்தல்,
அறிய வைக்கும்!_
_அறிதல்,
தெளிய வைக்கும்!_
_தெளிதல்,
உணர வைக்கும்!_
_ உணரல்,
வினவ வைக்கும்!_
_வினவல்,
கூட வைக்கும்!_
_கூடல்,
கோர வைக்கும்!_
_கூடிக்கோரல்,
அதிர வைக்கும்!_
_அதிர்வுறலே,
கொடுக்க வைக்கும்!_
_எனவே,
*பறித்திட்ட ஓய்வூதியத்தை*க்_
_கொடுக்க
வைக்கும் நோக்கில்,_
_*கானலான
ஓய்வூதியம்* நூலினை_
_வாசிப்போம்!
*வாசிக்க வைப்போம்!!*_
*66 பக்கங்களுக்கான
அச்சுக்கூலி ரூ.25/-*