பள்ளிகளில் 2072 ஆசிரியர் பணியிடங்கள்

பள்ளிகளில் ஆசிரியர் பணி மற்றும் அலுவலக பணிகளுக்கு 2072 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இது பற்றிய விவரம் வருமாறு:–
மத்திய கல்வி அமைப்புகளில் ஒன்று நவோதயா வித்யாலயா சமிதி. இந்த அமைப்பின் கீழ் செயல்படும் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களில் கற்பித்தல் மற்றும் கற்பித்தல் சாராத அலுவலக பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. உதவி ஆணையர், பிரின்சிபால், முதுநிலை பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் போன்ற பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 2 ஆயிரத்து 72 பணி யிடங்கள் நிரப்பப்படுகிறது.
பணி வாரியாக அசிஸ்டன்ட் கமிஷனர் பணிக்கு 2 பேரும், பிரின்சிபால் பணிக்கு 40 பேரும், முதுநிலை ஆசிரியர் பணிக்கு 880 பேரும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 660 பேரும், பட்டதாரி ஆசிரியர் (மூன்றாம் மொழிகள்) 255 பேரும், மிஸ்க் கேட்டகரி டீச்சர் பணிக்கு 235 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
வயது வரம்பு: 
உதவி ஆணையர் மற்றும் பிரின்சிபால் பணிக்கு 45 வயதுக்கு உட்பட்டவர்களும், முதுலை ஆசிரியர் பணிக்கு 40 வயதுக்கு உட்பட்டவர்களும், இதர பணிக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். 31–7–2016 தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
கல்வித்தகுதி: 
முதுநிலை அறிவியல் மற்றும் கலைப்படிப்புகளுடன், பி.எட். படித்தவர்கள், இளநிலை பட்டிப்படிப்புடன் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்: 
உதவி ஆணையர் மற்றும் பிரின்சிபால் பணி விண்ணப்பதாரர்கள் ரூ.1500–ம், இதர பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.1000–ம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 9–10–2016 வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். 14–10–2016–ந் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும். எழுத்து தேர்வு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்த உத் தேசிக்கப்பட்டு உள்ளது. இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து பிற்கால உபயோகத்திற்காக வைத்துக் கொள்ளவும். 
இது பற்றிய விவரங்களை   www.nvs-hq.org/ www.mecbsegov.in  ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம்.