10ம் வகுப்புசெய்முறை தேர்வு

சென்னை, :பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச்சில் நடக்க உள்ள நிலையில், செய்முறை தேர்வு அறிவிப்பதில், தாமதம் ஏற்பட்டது. செய்முறை தேர்வு தேதி முன்கூட்டியே தெரிந்தால் தான், அதன்படி திட்டமிட்டு, எழுத்துத்

தேர்வுக்கு தயாராக முடியும் என, ஆசிரியர்களும், மாணவர்களும் எதிர்பார்த்திருந்தனர்.இந்நிலையில், அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பில், '10ம் வகுப்பு மாணவர்களுக்கு, பிப்., 22 முதல் மார்ச், 2க்குள் செய்முறை தேர்வு நடத்தி முடிக்கப்படும்' என, தெரிவித்து உள்ளார்.