திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு செவ்வாயன்றும் விடுமுறை

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை செவ்வாய்கிழமை (17.11.2015) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

 வடகிழக்குப் பருவமழையையொட்டி ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மழை தொடர்கிறது.
இந்த நிலையில், மேற்கண்ட மாவட்டங்கள் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை செவ்வாய்கிழமை(நவ.17) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.