'பிட்' வைத்திருந்த 62 பேர் சிக்கினர்

சென்னை: பிளஸ் 2 வேதியியல் மற்றும் கணக்குப்பதிவியல் தேர்வில், பிட் வைத்திருந்த, 37 மாணவர் உட்பட, 62 பேர் பிடிபட்டுள்ளனர். பிளஸ் 2 தேர்வில்,
நேற்று, வேதியியல் மற்றும் கணக்குப் பதிவியலுக்கு தேர்வு நடந்தது. இதில் வேதியியலில், 36 மாணவர்; இரண்டு தனித் தேர்வர்கள், 'பிட்' வைத்திருந்ததாக பிடிபட்டனர். இதில், திருவண்ணாமலை மாவட்டத்தில், அதிகபட்சமாக, 18 மாணவர் பிடிபட்டுள்ளனர். கணக்குப் பதிவியல் தேர்வில், 23 தனித்தேர்வர்கள், ஒரு மாணவர் பிடிபட்டனர். இதில், கடலூரில், அதிகபட்சமாக, 14 பேர் சிக்கினர்