குரூப்–4 தேர்வுக்கான கீ ஆன்சர் ஒரு வாரத்திற்குள் இணையதளத்தில் வெளியிடப்படும் டி.என்.பி.எஸ்.சி. தலைவர்

தமிழகம் முழுவதும் 12 லட்சத்து 72 ஆயிரத்து 293 பேர் குரூப்–4 தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதற்காக மொத்தம் 4,448 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. முதன்மை
கண்காணிப்பாளர்கள், தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள், நடமாடும் குழுக்கள், பறக்கும் படை என தேர்வு எழுதுபவர்களை கண்காணிப்பதற்காக 72,551 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

 இது குறித்து  டி.என்.பி.எஸ்.சி. தலைவர் (பொறுப்பு) சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

குரூப்–4 தேர்வு முடிவுகள் 2 மாதத்துக்குள் வெளியிடப்படும். இத்தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடை (கீ ஆன்சர்) ஒருவாரத்திற்குள் வெளியிடப்படும்.

விடைத்தாள் திருத்தும் பணிகள் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். ஆகையால் முறைகேடுகள் நடந்துவிடுமோ? என்று யாரும் அச்சப்படவேண்டாம்.  இவ்வாறு அவர் கூறினார்.