246 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், உயர் ரக தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைக்கும் பணி தீவிரம்!!

கடலுார் மாவட்டத்தில், 246 அரசு உயர்நிலைமேல்நிலை பள்ளிகளில்உயர் ரக தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறதுதமிழகத்தில்அரசு பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்தகல்வி துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
  
குறிப்பாகஅரசு பள்ளிகளில் கணினிமடிக்கணினி வாயிலாக கல்வி கற்பிக்கப்படுகிறது.இதற்காகஇணையதள வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஒன்றிரண்டு எண்ணிக்கையில் கணினிமடிக்கணினி உள்ளதால்கல்வி கற்பிப்பதிலும்ஆசிரியர்கள்மாணவமாணவியரின் வருகை பதிவேடு விவரங்கள்நலத்திட்ட உதவி பெறுவோர் எண்ணிக்கைஅனைத்து தேர்வு தொடர்பான விவரங்கள் பதிவேற்றம் செய்வதிலும்நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது.
  
இதனை கருத்தில் கொண்டு மாவட்டம் வாரியாக அரசு உயர்நிலைமேல்நிலை பள்ளிகளில்உயர் ரக தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைக்க பள்ளி கல்வி துறை திட்டமிட்டது.

அதன்படிகடலுார் மாவட்டத்திலும் உயர் ரக தொழில் நுட்ப கணினி ஆய்வகம் அமைக்கும் பணி கடந்த மூன்று மாதங்களாக நடக்கிறதுமாவட்டத்தில் 246 அரசு உயர்நிலைமேல்நிலை பள்ளிகள் உள்ளன.

இதில், 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவமாணவியர் படிக்கின்றனர்.அரசு உயர்நிலைப் பள்ளிகளில், 10 கம்ப்யூட்டர்கள்மேல்நிலை பள்ளிகளில் 20 கம்ப்யூட்டர்கள் அமைக்கப்பட்டுஇணையதள வசதி ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இதுவரை 206 பள்ளிகளில் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளதுமீதமுள்ள பள்ளிகளில் ஆய்வகம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
  
இது குறித்துகல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்மாவட்டத்தில் அரசு உயர்நிலைமேல்நிலை பள்ளிகளில் கணினி ஆய்வகம் அமைக்கப்பட்டு வருகிறதுஇதன் மூலமாக ஒவ்வொரு வகுப்பு மாணவமாணவியருக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுகல்வி கற்பிக்கப்படும்குறிப்பாககம்ப்யூட்டர் இயக்குவதுபாடம் சார்ந்த தகவல்கள் பெறுவது குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்மேலும்ஆசிரியர்மாணவமாணவியரின் வருகை பதிவேடு விவரங்கள்அனைத்து தேர்வுகள் தொடர்பான விவரங்களை உடனுக்குடன் பதிவேற்றம் செய்யலாம்நுழைவுத் தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்கலாம்பணிகள் முடிவடைந்ததும்விரைவில் கணினி மூலமாக கல்வி கற்பிக்கப் படும் என்றார்.