இன்று இன்ஜி., கவுன்சிலிங் தரவரிசை

சென்னை: தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 1.72 லட்சம் இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு, இன்று(ஜூன் 20) தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.





அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, தமிழக உயர் கல்வி துறையின் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. மொத்தம், 1.33 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில், 1.04 லட்சம் பேர் மட்டும், அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கான தரவரிசை பட்டியல், இன்று வெளியிடப்பட உள்ளது.




மாணவர்களின், 'கட் ஆப்' மதிப்பெண் அடிப்படையில், ஒட்டுமொத்த தரவரிசையும், ஜாதி வாரி தர வரிசையும், இந்த பட்டியலில் இடம்பெறும். கவுன்சிலிங் நடவடிக்கைகள், வரும், 25ம் தேதி துவங்குகின்றன. பொது பாட பிரிவு மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு கவுன்சிலிங், ஜூலை, 3 முதல், 30 வரை, 'ஆன்லைன்' வழியே நடத்தப்பட உள்ளது.