'குரூப் - 4' தேர்வு தேதி அறிவிப்பு

சென்னை: அரசு துறைகளில், பல்வேறு பதவிகளுக்கான, 'குரூப் - 4' தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப பதிவு, வரும், 14ம் தேதி முதல் துவங்க உள்ளது.


அரசு துறைகளில், பல்வேறு பதவிகளுக்கான காலியிடங்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக நிரப்பப்படுகின்றன. இந்த வகையில், அரசு துறைகளில் காலியாக உள்ள, குரூப் - 4 பதவிகளுக்கான தேர்வு தேதி, நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வு, செப்டம்பர், 1ல், நடத்தப்படுகிறது.

இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, 14ம் தேதி துவங்குகிறது. ஜூலை, 14 வரை விண்ணப்ப பதிவுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தேர்வின் வழியே, எத்தனை இடங்கள் நிரப்பப்படும்; எந்தெந்த பதவிகள் காலியாக உள்ளன என்ற விபரம், பின்னர் வெளியிடப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., செயலர், நந்தகுமார் அறிவித்துள்ளார்.

விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு, இட ஒதுக்கீடு விதிகள் உள்ளிட்ட விபரங்கள், வரும், 14ம் தேதி வெளியிடப்படுகின்றன. கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.