தன் இரு பிள்ளைகளையும் அரசுப்பள்ளியில் சேர்த்த அரசுப்பள்ளி ஆசிரியர்

எங்கள் பள்ளியில் எங்கள் மாணவர்கள் பெறும் திறன்களை என் பிள்ளைகளும் பெற வேண்டும் என்பதற்காக என் மகன் தமிழினியனை ஐந்தாம் வகுப்பிலும் , மகள் மித்ராவை இரண்டாம் வகுப்பிலும் தமிழ்வழிக் கல்வியில் எங்கள் பள்ளியில்( ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, மு.களத்தூர், தொட்டியம் ஒன்றியம், திருச்சி மாவட்டம் )இன்று ( 10.5.2019 ) சேர்த்தேன்.
- குருமூர்த்தி, இடைநிலை ஆசிரியர்.