தேர்தல் முடிந்ததும் ஆங்கில பள்ளி துவக்கம்

கோபிசெட்டிபாளையம், ''தேர்தல் முடிந்து, பள்ளி துவங்கியதும், தமிழகத்தில் ஆங்கில
பள்ளி கொண்டு வரப்படும்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன், கோபியில் நேற்று பேசினார்.ஈரோடு மாவட்டம், கோபி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், அமைச்சர், செங்கோட்டையன் நேற்று பிரசாரம் செய்தார்.அப்போது அவர்பேசியதாவது:எட்டு முதல், 10 வகுப்புக்கும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் முடித்து செல்லும், 28 லட்சம் மாணவ - மாணவியருக்கு, ஜூன்.,15க்குள் லேப்டாப் வழங்கப்படும். தேர்தல் முடிந்து, பள்ளிகள் துவங்கியதும், தமிழகத்தில், ஆங்கில பள்ளியும் கொண்டு வரப்படும்.இவ்வாறு, அவர்பேசினார்.