சென்னை: புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலர் உறுப்பினர் டி.சேகர் விடுத்துள்ள அறிவிப்பில், பொங்கலுக்கு முன்தினம் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகை கொண்டாடி வருகின்றனர்.
எனவே, இந்த நிலையை மாற்ற ரசாயனம் அல்லாத காற்றில் மாசு படாத அளவுக்கு பொதுமக்கள் புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளா
இதுதொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலர் உறுப்பினர் டி.சேகர் விடுத்துள்ள அறிவிப்பில், பொங்கலுக்கு முன்தினம் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகை கொண்டாடி வருகின்றனர்.
அன்றைய
தினம் வீடுகளில் சேகரிக்கப்பட்டுள்ள பழைய பொருட்கள், பழைய பிளாஸ்டிக்,
டயர், டியூப் போன்றவைகளை எரிப்பதால் வெளிப்படும் புகைக்காரணமாக காற்றில்
மாசு ஏற்படுதல், நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற
நோய்கள் ஏற்பட்டு பொது மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
புகைக்காரணமாக விமானங்கள் தங்களது சேவையை சரியான நேரத்தில் செலுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.
கடந்த
ஆண்டு சென்னையில் மட்டும் 16 விமானங்கள் காலதாமதம் ஏற்பட்டு சென்று
கொண்டுள்ளது. இதனை பொதுமக்கள் கருத்தில் கொள்ள வேண்டும். வாகன ஓட்டிகளும்
புகையினால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே, இந்த நிலையை மாற்ற ரசாயனம் அல்லாத காற்றில் மாசு படாத அளவுக்கு பொதுமக்கள் புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளா