மாணவிகள் கொலுசு அணிந்து வருவதால் மாணவர்களின் கவனம் திசை திருப்பப்படுகிறது: அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: மாணவிகள் கொலுசு அணிந்து வருவதால் மாணவர்களின் கவனம் திசை திருப்பப்பட்டு படிப்பு பாதிக்கப்படும் என்ற அமைச்சர் செங்கோட்டையன் மாணவிகள்
கொலுசு அணிந்து வருவதற்கு பள்ளிக்கல்விதுறை தடை விதித்துள்ளது குறித்து என் கவனத்திற்கு வரவில்லை என கூறினார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம், நகர்மன்ற பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு 723 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் ஜனவரி மாதம் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும். வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். அதுபோலவே பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே இலவச சைக்கிள், மடிக்கணினி வழங்கப்படும். யூடியூப் மூலம் மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசுடன் இணைந்து 671 பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் ஜனவரி 15 தேதிக்குள் அறிவியல் ஆய்வகம் அமைக்கப்படும் என்றார்.
மேலும், தமிழக்ததில் இருந்து இந்தாண்டு நீட் தோவுக்கு 26 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கஜா புயலால் நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மாணவிகள் கொலுசு அணிந்து வருவதற்கு பள்ளிக்கல்விதுறை தடை விதித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, மாணவிகள் கொலுசு அணிந்து வருவதற்கு பள்ளிக்கல்விதுறை தடை விதித்துள்ளது குறித்து என் கவனத்திற்கு வரவில்லை என்றவர் மாணவிகள் கொலுசு அணிந்து வருவதால் மாணவர்களின் கவனம் திசை திருப்பப்பட்டு படிப்பு பாதிக்கப்படும் என்றவர் மாணவிகள் பூ வைப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றார்.
ஆசிரியர்கள் இடமாற்றத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக ஆதாரத்துடன் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பதாக செங்கோட்டையன் கூறினார்.