'கஜா' புயல் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட அண்ணா பல்கலை தேர்வுகள், புதிய தேர்வு தேதி அறிவிப்பு

'கஜா' புயல் காரணமாக, திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் நாகை மாவட்டங்களில், அண்ணா பல்கலை தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதால், புதிய தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, நவ., 22, 23, 24ம் தேதிகளில் ரத்து செய்யப்பட்ட தேர்வுகள், முறையே, வரும், 18, 19, 20ம் தேதிகளில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. விபரங்களை அண்ணா பல்கலை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.