இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்

உடலால் பலவீனமாக இருந்தாலும், உள்ளத்தில் தைரியமாக இருப்பவர்களே மாற்றுத் திறனாளிகள். இவர்களுக்குள் பல்வேறு திறமைகள் மறைந்துள்ளன. ஆனால் சமூகம் இவர்களது உடல் குறையை மட்டும் வைத்து, அவர்களுக்கான வாய்ப்பை வழங்க மறுக்கிறது.
அவர்களுக்குரிய உரிமைகள் மற்றும் வசதிகளை வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் 1992 முதல் டிச., 3ல், 'சர்வதேச மாற்று திறனாளிகள் தினம்' கடைபிடிக்கப்படுகிறது. 'மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்துதல் மற்றும் சமவாய்ப்பு வழங்குதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.