புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் தேதி அறிவிப்பு

சென்னை: கஜா புயல் காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை
மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக பருவத் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
புயல் காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக் கழக பருவத் தேர்வுகள் வரும் டிச.18, 19 மற்றும் 20 தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.