அரசாணை நகல் எரிப்பு போராட்டம்: ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

சென்னை: சம்பள முரண்பாடுகளை களைய வேண்டும் எனக்கூறி, தொடக்க பள்ளி
ஆசிரியர்கள் மாவட்ட தலைநகரங்களில் கூடி அரசாணை நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 2,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கும்படி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.