''ஜாக்டோ
ஜியோ அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தில், டிசம்பர் வரை பங்கேற்க மாட்டோம்,''
என அரசுப் பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர், பாலசுப்பிரமணியன்
கூறினார்.மதுரை அருகே பரவை யில், சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.
மாநில தலைவர், சிவகுமார் தலைமை வகித்தார். பொது செயலர், கோபிநாத் முன்னிலை
வகித்தார்.பாலசுப்பிரமணியன் கூறியதாவது:
'கஜா' புயல் நிவாரண பணிகள் நடப்பதால், 'ஜாக்டோ - ஜியோ' அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தில், மக்கள் நலன் கருதி, டிசம்பர் வரை எங்கள் சங்கம் பங்கேற்காது. ஜனவரி முதல் அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்கும். முதல்வர் பழனிசாமி வேண்டுகோளை நாங்கள் ஏற்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
'கஜா' புயல் நிவாரண பணிகள் நடப்பதால், 'ஜாக்டோ - ஜியோ' அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தில், மக்கள் நலன் கருதி, டிசம்பர் வரை எங்கள் சங்கம் பங்கேற்காது. ஜனவரி முதல் அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்கும். முதல்வர் பழனிசாமி வேண்டுகோளை நாங்கள் ஏற்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.