School Morning Prayer Activities - 13.11.2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
 

திருக்குறள்:84
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
உரை:
நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.
 
பழமொழி :
Do i Rome as Romans do
ஊரோடு ஒத்து வாழ்
பொன்மொழி:
பிறரின் வீழ்ச்சியிலிருந்து,
நீ தவிர்க்க வேண்டிய
பாவங்கள் என்ன என்பதைக்
கற்றுக் கொள்.
இரண்டொழுக்க பண்பாடு :
1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .
2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .
பொது அறிவு :
1.பண்பாடுகளின் தாய்நகரம்?
பாரிஸ்
2.தண்ணீர் தேசம், மிதவை நகரம்?
வெனிஸ்
 
நீதிக்கதை
நான் கத்தவே இல்லை !
கண்ணுசாமி, பில்லாகுடி என்ற குக்கிராமத்தில் வசித்து வந்தான். மகா கஞ்சன். ஒரு நாள், விமான நிலையத்தைப் பார்ப்பதற்காக தன் மனைவியோடு வந்திருந்தான். விமானம் மேலே கிளம்புவதையும், வானில் வட்டமிடுவதையும், கீழே இறங்குவதையும், இருவரும் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவர்களின் ஆர்வத்தைப் பார்த்த அங்கிருந்த விமானி ஒருவர், “”நீங்கள் இருவரும் வாருங்கள்இந்த விமானத்தில் ஏறி, வானத்தில் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வரலாம். ஆளுக்கு நூறு ரூபாய் தான்!” என்றார்.
கஞ்சனுக்கு ஆர்வம் தான். இதற்காகவா இருநூறு ரூபாய் வீண் செலவு செய்வது என்று நினைத்து, “”நாங்கள் வரவில்லை,” என்றான்.
எப்படியும் அவர்களிடம் பணம் பெற நினைத்த விமானி, “”நீங்கள் பணம் தர வேண்டாம். எந்தக் கட்டணமும் இல்லாமல், உங்களை இனாமாகவே விமானத்தில் ஏற்றிச் செல்கிறேன். வானத்தில் விமானம் பறக்கும்போது, என்ன நடந்தாலும், நீங்கள் சிறு சத்தம் கூடப் போடக் கூடாது. அப்படி சத்தம் போட்டுவிட்டால், கட்டணமாகிய இருநூறு ரூபாயை நீங்கள் கொடுத்துவிட வேண்டும். சம்மதம் தானே?” என்றார்.
“”சம்மதம்!” என்றான் கஞ்சன். தன் மனைவியுடன், விமானத்தில் ஏறி அமர்ந்தான்; விமானம் பறக்கத் தொடங்கியது.
வானத்தில் விமானம் குட்டிக்கரணம் போட்டது. தலை கீழாகப் பறந்தது. சீறிப் பாய்ந்தது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்த கஞ்சன், சிறு ஓசை கூட எழுப்பவில்லை. வேறு வழியின்றி விமானத்தைத் தரை இறக்கினார் விமானி.
கஞ்சனின் கையைக் குலுக்கி, “”ஆமாம், பயமுறுத்தும் விமான விளையாட்டுகளை நான் வானத்தில் செய்யும்போது, இதுவரை எனக்குத் தெரிந்து சிறு ஓசைகூட எழுப்பாது இருந்தீர்கள்! என் பாராட்டுக்கள். எப்படி இது உங்களால் முடிந்தது?” என்று கேட்டார் விமானி.
“”நான் கூட, ஒரே ஒரு சமயம், என்னை அறியாமல் கத்த இருந்தேன். எப்படியோ முயன்று அடக்கிக் கொண்டேன்!” என்றான் கஞ்சன்.
“”எப்போது?” என்று கேட்டார் விமானி.
“”என் மனைவி, விமானத்தில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோது!” என்றான் கஞ்சன்.
மயங்கி விழுந்தார் விமானி.
 
இன்றைய செய்தி துளிகள்:
1.நவம்பர் 15ம் தேதி கடலூர் - வேதாரண்யம் இடையே பலத்த காற்றுடன் கஜா புயல் கரையை கடக்கும் எனத் என தமிழ்நாடு வெதர்மேன் தகவல்
2.LKG, UKG பாடப்பிரிவுகளுக்கு சிறப்பாசிரியர்கள் விரைவில் நியமனம் - அமைச்சர் செங்கொட்டையன்
3.ஆசிரியர்களுக்கு 'பயோ மெட்ரிக்' பதிவு : வரும்15ம் தேதி ஆலோசனை
4.பள்ளிகளில் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வகுப்புகளை ஏன் அறிமுகப்படுத்தக் கூடாது? உயர் நீதிமன்றம்
5.ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடர்: லீக் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா