வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்புச் சலுகை

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 2011 முதல் 2016 வரையிலான ஆண்டுகளில் பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு தமிழக அரசு சிறப்பு புதுப்பித்தல் சலுகையை வழங்கி உள்ளது.

எனவே, திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்கள் கல்வித் தகுதியை பதிவு செய்து புதுப்பிக்கத் தவறியவர்கள் 2019 ஜனவரி 24-ஆம் தேதிக்குள் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை, அசல் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றுடன் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து புதுப்பித்துக் கொள்ளலாம்.
மேலும், www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியிலும் புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும், 2011 முதல் 2016 வரையிலான ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறியவர்கள் மறுபதிவு செய்திருந்தாலும் இந்தச் சலுகையின்படி புதுப்பித்துக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.