புயல்: கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

கஜா புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து
அம்மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பையொட்டி, அனைத்துத் துறை அலுவலர்களும் கண்காணிப்பில் இருக்கவும், எவ்வித சூழலையும் எதிர்கொள்ளவும் தயார்படுத்தப்பட்டுள்ளனர். கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 
இந்நிலையில் கஜா புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். புயல் நாளை கரையைக் கடக்கவுள்ள சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆட்சியர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.