துணை மருத்துவம் : மாணவர்கள் ஆர்வம்

சென்னை: பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, துணை மருத்துவ படிப்புகளில் சேர, மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர். ஒரே நாளில், 5,191 பேர் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர்.அரசு
மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., - பி.பி.டி., உள்ளிட்ட, 15 துணை மருத்துவ படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு, அரசு ஒதுக்கீட்டில், 8,000; நிர்வாக ஒதுக்கீட்டில், 4,000த்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது.மாணவர் சேர்க்கைக்கான, விண்ணப்ப வினியோகம், 22 அரசு மருத்துவ கல்லுாரிகளில் நேற்று துவங்கியது. முதல் நாளில், 5,191 பேர் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர். மேலும், www.tnhealth.org; www.tnmedicalselection.org என்ற இணையதளங்களிலும், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பங்களை, வரும், 19ம் தேதி வரை பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 20ம் தேதிக்குள், கீழ்ப்பாக்கம், மருத்துவ மாணவர் சேர்க்கை குழு செயலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.